மனைவி நல்ல துணைவி

ஒரு காலத்தில்
நான் அழுதால் அழ
நான் சிரித்தால் சிரிக்க
எனக்காக காத்திருந்து
உணவளிக்க
ஒரு ஜீவன் இருந்ததது...

இன்று என் கண்ணீர்
துடைக்க கரங்கள் இல்லை
என் தேவைகளை கேட்க
நாதியில்லை
என்னால் இயலாத
காரியங்களுக்கு
துணை வர யாருமில்லை...

மனைவியாக மந்திரியாக
தாயாக தோழியாக
அவள் செய்த பணிவிடைகள்
கணக்கிடமுடியாதது
அந்த ஒரு ஜீவன் இல்லை
இன்று என் வாழ்வில் பெரும் தொல்லை...

தாய் இறகுகளுக்குள்
கதகதப்புடன்
உறங்கும் கோழி
குஞ்சுகளைப்போல்
அவளின் அறவனைப்பில்
சோகத்தை மறந்து
நிம்மதியாய் வாழ்ந்தது
என் குடும்பம்...

இன்று அந்த ஒரு ஜீவன் இல்லை
எல்லாம் தலைகீழ்...

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Apr-17, 11:25 am)
பார்வை : 577

மேலே