ஆத்தா

உறவுகள் ஆயிரம்
அதில் உன்னதமானது அம்மா
சீர் கேட்பாள் சகோதரி
பலம் கேட்பான் சகோதரன்
வளம் கேட்பார் தந்தை
தரம் பார்ப்பாள் தாரம்
உதவி கேட்பார் உற்றார்
போற்றி துதிபாடினால்
மகிழும் தெய்வம்
எதையும் எதிர்பாராமல்
நம் மீது பரிசுத்த அன்பை
பொழிபவள் அம்மா மட்டுமே
அவளின் பாதம் கழுவி
பாதமுத்தம் இட்டால்
புண்ணியம் சேரும்
ஏழேழு பிறவிக்கும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Apr-17, 12:04 pm)
Tanglish : aaththaa
பார்வை : 213

மேலே