வருண பகவானே

வருண பகவானே
மனசு வெய்யுமய்யா
வறண்ட நிலத்துல
நிறைஞ்ச மழை
பெய்யுமய்யா
கஞ்சிக்கும் வழியின்றி
பாவி மக்க வாடுறாங்க
தொண்டைக் குழி வறளுது
நிலத்துக் குழி காயுது
பாசனமே இல்லாம
பயிரெல்லாம் வாடுது
விவசாயி இடுப்புல
கோவணம்தான் மிஞ்சுது
கொடுத்த கையெல்லாம்
கேட்டு கை நீட்டுது
வாடுன உள்ளத்துக்கு
நல்ல வழி காட்டுமய்யா
கெட்டவங்க பலரிங்கிருக்க
கெட்ட பேரு நீ வாங்கலாமா
குட்ட வாங்கிக்கறோம்
குட்டை குளம் நிறைய
கூரை கிழிய பெருமழை பெய்யுமய்யா

எழுதியவர் : லட்சுமி (16-Apr-17, 1:14 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 870

மேலே