பள்ளியில் பூத்த காதல்

ஆறிரண்டு அகவை இருக்க
அவளை முதலில் கண்டேன்
பார்வை ஒன்றால் மயக்கி
பள்ளி சீருடை​ரோடு செல்வாள்

கண்களைக் கொண்டு சிரிக்கும்
கலையை எங்கு கற்றாளோ?
தன்னை அறியாமல் கால்களும்
தானாய் அவள்பின் செல்லும்

சிற்றிடை நடனம் புரிந்து
சிந்தையை ஈர்த்து செல்வாள்
ஓரிரு வார்த்தை பேசினாலும்
இன்பக்காதலை அதிலே சொல்வாள்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Apr-17, 3:45 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 595

மேலே