முதல் காதலே

முதல் காதலே நீ
கனவாய் கரைந்து ,
கண்களில் கலந்து ,
கண்ணீராய் விழுந்து விட்டாய் .

என் மௌனம் கெஞ்சியதை ,
கண்கள் கேழுவதை ,
நீ மதிக்காமல் ,
சென்றுவிட்டாய் .

உன் ஒரு அழைப்பிற்காக ,
காத்திருந்தேன் .
அழைக்காமல் சென்று விட்டாய் ,
உயிரோடு கொன்று விட்டாய் .

காலங்கள் மாற்றின
என் வாழ்க்கையை,
மனதை மாற்றும் முயற்சியில் ,
காலமும் தோற்றது .

நீ இன்னொரு விரல் பிடித்ததும்,
மனதில் மௌன இடி ,
இமைகள் தானாய் நனைந்தது
இதழ்கள் வேதனையில் சிவந்தது .

மறக்கத்தான் ,
மீண்டும்
மீண்டும்
நினைக்கிறேன் .........

எழுதியவர் : (16-Apr-17, 8:22 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : muthal kaathale
பார்வை : 347

மேலே