என் மன்னவனே வருவாயா
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
வாய்மொழிகள் இல்லாது வாசுதேவன் தான்மயக்கும்
வேய்ங்குழலின் ஓசையினில் வேல்விழிகள் தூங்காது
நோய்கொண்டு நின்னன்பில் நோகுமுடல் நாளுமிங்கு
தேய்கின்ற பால்மதி தேடியின்று நீவருவாய்
சேய்மனதின் வேதனை நீக்கு.....