மனிதனும் புறாவும்

கொடுத்த ஒரு படத்துக்கு ஏற்றபடி எழுதும் கவிதை படக்கவிதை எனப்படும். அனேகமாக பல இணையதள இதழ்களெல்லாம், தற்போது ஏதாவதொரு படத்தைப் போட்டு, இதற்கு கவிதை எழுதுங்கள் என்கிற வழக்கம் அதிகமாகத் தென்படுகிறது. வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டிக்கு என்னுடைய சமர்ப்பணம்.
=========================

மனிதனும் புறாவும்
==========================


ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
உயிரினமாம் அரியபுறா..!

கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
கூடிவாழும் கூட்டினம்..!

பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
அடைகாக்கும் தந்தைப்புறா..!

பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
பாடல்போன்ற முனகலோடு..

ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
பலமைல்பறக்க சக்தியுண்டு..!

வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
தன்னையே வளையவரும்..!

வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
பன்னிறவண்ண முன்பகட்டு..!

வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
பழகிடுமடிமைப் பண்பு..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (17-Apr-17, 11:37 am)
பார்வை : 126

மேலே