மகி

தீடிரென்று கணவனால் தக்கப்பட்டால் இரவு 12 மணி அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.தன் கணவனை பார்த்த வண்ணம் அவள் விழிகளில் அவன் உருவம் பதிய உயிர் பிரியும்
நிமிடங்கள்,ஏதோ சொல்ல வந்தவள் மீண்டும் மரண அடி அவள் மண்டையில் மணி 12.10
நாய்கள் ஓலமிட பயம் கலந்த இரவாக பட படத்தன சிவாவின் மனது..
கோணிப்பையில் மகியின் உடலை அடைத்து காரில் புறப்பட்டான் வழியில் சில வாகனங்கள் அவன் துணைக்கு பயணம் போனது சாலையில் .மெல்ல சாலையின் சிறிது தூரத்தில் கீழ்புறம் இறங்கி அடர்ந்த வனபகுதியில் அவளை புதைத்தான்.
கார் வீட்டு நோக்கி பாய்ந்தது,கதவு திறந்ததை கண்ட சிவா திடுக்கிட்டான்
யார் அங்க? யார் அங்க? சிவாவின் குரல்..
டேய் நான் வந்துட்டேன் என மகியின் பலமாக குரல் கேட்க..
உடனே சிவா பூஜை அறைபக்கம் ஓடினான் ..
அவனை வெறி கொண்டு தாக்க அய்யோ என அலறினான் .
அப்போது மகி நமக்கு கல்யாணம் ஆகி 6 மாதம் கூட ஆகலா..
போட்ட நகை எங்கே ?இன்னும் பணம் வேற வேணும் உனக்கு?
என்ன ஆறு மாசமா கர்ப்பமா வேற!
தீடிரென்று வித்தியாசமான உருவம் அவன் முன் !
அலறினான் வளராத உருவம் முழு சக்தி கொண்டு தாக்க அது கேட்து
அம்மாவை என்டா கொன்ன?
சிவா உடல் நடுங்கி கத்த ஆரம்பித்தான்..
பணம் கேட்டேன் தரலை அவ..
மீண்டும் இரண்டு அடி அவன் மேல் இடி போல் விழ.அலறி விழுந்தான் விழுந்தவன் சட்டைபையில் இருந்து
வசீகரமான பெண்ணின் புகைப்படம்
மணி 2..யார் இவள்?
அந்த இரண்டு ஆவிகளும் சிவாவை மடிக்கு இழுத்து சென்று..
அலறல் சப்தம்..
மகி மன்னித்து விடு என..

எழுதியவர் : சிவசக்தி (17-Apr-17, 2:02 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : mahi
பார்வை : 276

மேலே