கண்ணன் கலி - வாழ்த்து

காப்பு :

கோட்டை மேலருங் கோயிலைக் கொண்டவா !
ஆட்ட நாயகா ! ஆனைமு கத்தொடு
வாட்டம் நீக்கிடும் வல்லவ ! நின்னருள்
காட்டி யான்செயும் காரியங் காத்திடே !

வாழ்த்து :

சிறையினிற் றோன்றிய சீரே ! கண்ணணே !
முறையிலா மாமனை முற்று மழித்தவா !
இறையவ னேயருள் ஈண்டு கொடுத்திடும்
நிறையவ னேயெமை நித்தங் காக்கவே !

நாரண னம்சமே நாங்க ளேத்திடும்
பூரண னேநகை பூண்டு திகழ்பவ !
தோரண நாயக ! தொக்கை விளைத்திடுங்
காரணத் தீதைய கற்றிக் காக்கவே !

வாசுகி யாவள் வந்து குடையெனத்
தேசுடன் மாறியே தேகங் காத்திட
மாசிலா கோகுல மன்றன் சேர்ந்தவ !
ஆசிகள் தந்தெமை அணித்துக் காக்கவே !

தேவகி மைந்தனே ! தேவ ரும்புகழ்
பூவுல காண்டிடும் புண்ய மூர்த்தியே !
மேவுக எம்முளே மேன்மை நேர்ந்திடக்
காவலா யாகியே கண்ணாய்க் காக்கவே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (18-Apr-17, 6:13 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 46

மேலே