நீ இன்னும் எனக்கு செல்லக்குட்டி
மயில் இறகை புத்தகத்தின் நடுவே வைத்தால்
குட்டி போடும் என்று உனக்கு யார் சொன்னார்களோ !
நானும் ஒரு" கவிதை "எழுதி தருகிறேன் அதை
மயிலிறகின் அடியில் வைத்துக்கொள்ளேன் !
இன்னொரு "கவிதைக்குட்டி " வருகிறதா என்று பார்க்கலாம் !
ஆதலால் தான் நீ இன்னும் எனக்கு "செல்லக்குட்டி "