உதிரத்தில் கலந்துவிட்ட உன் நினைவுகள் 555
உயிரே...
நீ என்னை பிரிந்த நிமிடம்
முதல் மணித்துளிகள் நகரலாம்...
உனக்கு இன்பமான
நிமிடங்களாகவே ஒவ்வொன்றும்...
நகரும் ஒவ்வொரு
மணித்துளியிலும்...
என் விழிகள்
நனைந்துகொண்டே இருக்குதடி...
நீ நான் நாம்
என்று சொன்னாய் அன்று...
இன்று நீ பேசிய வார்த்தை நான் மட்டும்
என்று நினைக்க வைத்ததடி...
காதலை சொல்ல உன்னிடம்
பலநாட்கள் தயங்கியே நின்றேன்...
எப்படி நீ சொன்னாய்
ஓரிரு நிமிடத்தில்...
உன் பாதையும் என் பாதையும்
வேறுவேறென்று எளிமையாக...
எனக்கு நகர்கிறது வினாடிகள்
என் விழிகளில் ஈரமாகவே...
உனக்கு இன்பமாக நகர்ந்தாள்
சந்தோஷம்தாண்டி...
என் உறக்கத்தை
தொலைத்துவிட்டேன்...
என் உயிரில் கலந்துவிட்ட
உன் நினைவால்.....