அவளும், நானும், அச்சமயமும்

அவளும், நானும், அச்சமயமும்
============================

அவளைச்சுற்றிய ஓராளும் தராததை
அவளுக்கு தருகிறேன்
"சமயம்"

அச் சமயம்
அவளைக் காணும்போது
ஜொலிக்கின்றது போலும் அறிவதில்லை
அத்தனை அழகு

ஒரு பெண்
ஏற்றும் அதிகம் சந்தோஷப்படுவது
எப்போன்னு தெரியுமா
ஆச்சர்யங்களை ஒருவரிடமிருந்து பெறும்போது
புன்சிரிப்பு,
சிறிய பரிசுகள், சிறிய வார்த்தைகள்
இஷ்டப்பட்ட ஆடையை
உடுத்திறங்கி வரும்போது
நல்லா இருக்கு என்று
சொல்லும் வார்த்தையின்போது
அவன் அவளை
தனைமறந்து வாய்நோக்கும்போது
ஆள் கூட்டத்தில்
யாருமறியாதே
அவன் அவளுடைய கைப்பிடிக்கும்போது
அவளறியாதே
அவளைக் கட்டிப்பிடிக்கும்போது
பின்னே
அவள் எதிர்பாராதிருக்கையில்
ஒரு முத்தமிடும்போது
அவள் அவளைக்குறித்து சிந்திக்காதே இருக்கும்போது
அவனோடிருக்கும்
அந்த நிமிஷத்தைத் தவிர
பாக்கி உள்ள நிமிஷங்களை மறந்துபோகும்போது
பரிச்சயமில்லாத புதியொரு வாசனை
அவள் சரீரத்தில்
பதிவாகும்போது
தவறென்று தள்ளிவிட்டவைகளை
தனித்திருக்கும்போது
சரியென்று நினைக்கும்போது
அவள் காதலித்திருப்பாள்

வேண்டுமென்று ஆக்கிரகமுள்ள
பலதையும்
வேண்டாமென்று ஒதுக்கிப் போகிற சக்தி
பெண்ணிடம் மட்டுமே

பெண்,
மழையைப்போல,
இடைக்கு பொழிவதும்,
பொழிந்து கொண்டிருக்குமிடைக்கு
தூறுவதும் என
அவளிடம்
நேடிய நிமிஷங்கள் தான்
நேடாத நிமிஷங்களைவிட அழகு
இந்த நிமிஷங்கள் தான்
தயக்கங்களுடன்
அவள் அவனை அனுமதிக்கிறேன் என்று
சொல்லவும் செயகிறது
ஏனோ வேனல் சில்லுகள் போல் மனமிருந்தாலும்
அவன் மழையில் நனையாதே
கொதியோடே ஒளியும் பார்வையுள்
தணல் போல்
அணையாத காற்றுபோல்
சிறுபூவினுள் தேங்கியே அவள் சமயம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (19-Apr-17, 5:40 am)
பார்வை : 321

மேலே