காதலின் முதல் விதை

மழை பெய்யும்
பொழுதெல்லம்
உன் நியாபகம் ஏனோ
வந்து விட்டு
செல்கிறது..!!
பள்ளி முடிந்த
ஓருநாள் மழைப்
பெய்ய அருகில்
உள்ள மரத்தின் அடியில்
நான் என் நண்பர்களூடன்
நின்று கொண்டிருந்தேன்
அப்பொழுது தான்
நீ உன் தோழிகளுடன்
நீ வந்தாய்...
மழைக்கு ஓதுங்க அந்த
ஒற்றை மரம்
மட்டுமே இருக்க
ஓதுங்க இடமில்லாமல்
உன் தோழியுடன்
நனைந்து கொண்டிருந்தாய்...
அதைக் கண்ட
நான் நண்பர்களிடம்
அவர்களுக்கு ஓதுங்க
இடம் தருமாறு
கூற அவர்கள் முதலில்
கேலி பேசினாலும்
விலகி இடம்
தந்தனர்
உங்களை அங்கு வருமாறு கூறினேன்
நீ தயங்கினாய்,
ஆனால் உன் தோழிகள்
உன்னை பிடித்திலூக்க
அந்த மரத்தடியில்
ஒதுங்கினாய்...
நண்பர்களுடன் பேசிக்
கொண்டிருந்த நான்
திரும்பி பார்க்க
அப்பொழுது நீயும்
என்னை பார்த்தாய்
அன்று தான்
நமக்குள் காதலூக்கான
முதல் விதை
விழுந்தது.....

எழுதியவர் : அருள் ஜெ (20-Apr-17, 8:19 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 107

மேலே