சேராதோ உன்னிடம்

இதழ்கள் சொல்லாததை
இமைகள் சொல்லுமென
நினைத்தேன் !

இமைகளும் தயங்கியது
உன் விழி
பார்க்கையில் !

என்ன செய்வேன்
நான் !

உள்ளூற கிடந்த
ஆசை யாவும்

இதழும் விழுங்க
இமையும் மறைக்க

கவிஞனாகி போனேன்
என் கவிதை

என்றாவது ஓர்
நாள் உன்னை
சேராதோ என்று !

எழுதியவர் : புகழ்விழி (20-Apr-17, 9:01 pm)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 508

மேலே