வியந்துவிட்டேன் உன் பெயரினிலே

ஆயிரம் கவிதைகள் உனக்காக எழுத ஆசை எனக்கு ஆனால் . உன்னை பார்க்கையில் விழிகள் மயங்குகின்றன விரல்கள் நடுங்குகின்றன மனதினிலே உள்ள ஆசை விரல் நூனியினிலே வந்துசேர கேட்கிறது காலம் என் செவியோ கேட்டதையே எழுத சொல்கிறது என் மனமோ சம்மதிக்க வில்லை என் அறிவோகேட்கிறது கவிதை எழுதும் அளவிற்கு உனக்கு ஞானம் உண்டோ என தாய் மடி போல் தாலாட்ட வருபவளே தந்தை போல் கண்டிக்க வருபவளே சாகோதரிபோல் சண்டை போட வருபவளே நண்பன் போல் துணை நிற்க வருபவளே உனக்கான கவிதையை எழுதி விட்டேன் என நினைக்கையில் தான் புரிந்தது உன் பெயரே கவிதை என்று ***பெண்*** கடவுள் கொடுத்த இந்த ஈரெழுத்துக்கு எதிரே போட்டி போட்டு நிற்க முடியுமா என் கவிதை

எழுதியவர் : மகாராஜ் (21-Apr-17, 10:41 pm)
சேர்த்தது : Maharaj9582
பார்வை : 74

மேலே