தமிழே எங்கள் தாய்

என் தமிழை தவிர வேறெதுவும்
எனக்கு பெரிது இல்லை .....

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

```````````````````````````````````````````````````

பிறர் குறையை காணும் முன்
உன் குறையை நிவர்த்தி செய் .....


பெரியவன் சிறியவன்
என்று எவனும் இல்லை
எல்லோரும் சமமானவன் .....
வயது சொல்வதில்லை வளர்ச்சியை
எண்ணம் சொல்கிறது .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

அடையாளத்தை இழந்து விட்டு
சொர்க்கமே பெற்றாலும்
அது சொர்க்கம் ஆகாது .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தியா எல்லாம் இன்று பிறந்தது ......
சாதி மதம் எல்லாம் நேற்று பிறந்தது ......
பணம் எல்லாம் இடையில் பிறந்தது .....
அடையாளம்(தமிழ் ),இயற்கை அதனோடு இசை
ஆதியில் பிறந்தது .....

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் உண்டு
அதை யாருக்காகவும் இழந்து விடாதீர்கள்
(குறிப்பாக அரசியல்வாதிகளே பணத்திற்காகவும், வேறு எதற்காகவும் உங்கள் அடையாளத்தை இழந்து விடாதீர்கள் .....
அடையாளமும் இயற்கையும் அழிந்த பின்
எதற்கு இந்த பணம்?
யாருக்கு ? எதற்கு பயன் ? இந்த பணமும் பதவியும் உன் பம்மாத்தும் )

தமிழனுக்கு தமிழ் முக்கியம்
ஆங்கிலேயனுக்கு ஆங்கிலம் முக்கியம்
இந்தியனுக்கு இந்தி முக்கியம்

ஒருவரின் அடையாளம் மாறவே மாறாது
உயிர் போகும் வரைக்கும்.....
தமிழனின் அடையாளம் தமிழ் .....

யார் மீதும் எதையும் திணிக்க முடியாது .....
உன் மொழி உனக்கு எப்படியோ
அதை காட்டிலும் உயர்வானது பிறருக்கு அவன் மொழி .....
நீ எண்ணுவது போலத் தானே பிறரும் எண்ணுவான் ......

ஒரு மொழி ஒருவனின் அடையாளம்
அடையாளத்தை என்ன செய்தாலும் மாற்ற முடியாது .....
அது ரத்தத்தில் ஊறிய ஒன்று .....

தமிழ் மொழியை தமிழன் பேசுவதே போதும் .....
யாரையும் எங்கள் மொழியை நாங்கள் பேசச் சொல்ல வில்லை .....
ஏன் என்றால் அது எங்கள் அடையாளம் ......
உங்கள் அடையாளம் உங்கள் மொழி .....

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அடையாளம் அவன் உயிரை விட மிக முக்கியம் .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனிதன் பிறந்த பின் தான் மதம் பிறந்தது .....
ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் மனமே உண்மை அதுவே கடவுள் .....
இயற்கை தான் நம் தாய் .....
தமிழ் தான் நம் அடையாளம் .....
நம் தாய்ப் பாலின் வீரம் தான் நம் தமிழ் .....

எதிர்த்து நிற்பவரை எதிர்க்க வேண்டும் .....
எதுவும் இல்லாமல் வேண்டுமென்றே வன்முறையில் பிறரை(இந்தியனை,சிங்களனை) போல் தமிழன் இறங்க மாட்டான் .....
தன் மொழிக்காவும், தன் இனத்திற்காவும் ,தன் அடையாளத்திற்காவும் ,தன் மண்ணிற்காவும் , தன் தாய் பூமிக்காகவும் ,அதன் வளத்திற்காவும் தமிழன் என்றுமே போராடுவான் ......
போராடி வெல்வான் .....
தமிழன் பிறரை போல் வஞ்சிக்க மாட்டான் .....

தவறு என்றால் தட்டிக் கேட்போம் .....
தவறு செய்பவனை விட
அந்த தவறை செய்யும் பொழுது
தட்டிக் கேட்காமல் கூட்டத்த தோடு கூட்டமாக நிற்பவனே
மிகப் பெரிய குற்றவாளி .....

தமிழின படுகொலை விடயத்தில்
சிங்களனுக்கு ஆதரவாய் நியாயமின்றி பக்கபலமாய் இருக்கும் இந்தியா போன்ற நாடுகள் ....
ஐ.நா வையும் சேர்த்து தான் .....

தமிழுக்கு மாத்திரமே தலை வணங்குவோம் .....
சாதி இரண்டொழிய வேறு இல்லை
பெண் சாதி ஆண் சாதி
இதிலும் எந்த பாகுபாடும் இல்லை .....
இந்த தரணியில் எல்லோருமே சமமானவர்கள் ......

யாருக்கும் யாரும் ஆண்டான் அடிமை இல்லை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் .....
தமிழன் யார் காலையும் எப்பொழுதும் எதற்காகவும் பிடிக்க மாட்டான் .....
தன் நீதி சூழ்ச்சியில் பொய்யானால் தமிழின் மடியில் உயிரை மாய்ப்பான்....

தமிழே எங்கள் தாய்
தமிழை தவிர தரணியில் பெரிது எதுவும் இல்லை.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனிதனாக வாழ் .....
மரணிக்கும் நொடியும் உன் அடையாளத்தோடு வாழ்.....
தாய் மொழி என்பது மனிதனின் உயிர் மூச்சு ......
ஒரு மொழி தான் எந்த நாட்டவருக்கு அவரின் அடையாளமாகும் .....
வாழ்க்கை ஒன்றே....இயற்கையை ரசியுங்கள்.....இசையை கேளுங்கள்....தாய் மடியில் தவழுங்கள்.....ஒவ்வொரு நொடியையும் உண்மையாக அனுபவித்து வாழுங்கள்.....மழலை மனம் கொள்ளுங்கள் .....நயவஞ்சகம் இல்லா நல்ல வாழ்க்கை வாழுங்கள் மகிழ்ச்சியாக எல்லா நொடிகளிலும் உண்மையாக.....


தமிழச்சியாக பிறந்து தமிழச்சியாக வளர்ந்து தமிழச்சியாகவே மரணிக்க நினைக்கும்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Apr-17, 8:15 am)
பார்வை : 586

மேலே