அன்பே வாழ்வின் ஆதாரம்

அன்பென்னும் சக்தி நிரம்பிய இருதயங்களில் விருப்புகளும், வெறுப்புகளும் குடிகொள்ளாமல்,
நாளும் நம்பிக்கையை அளித்தரும் நடைமுறைகளே நிகழ,
விதிகள் எல்லாமே காலத்திட்ப்பட்டவை என்றே மதியும் உணர,
அனுதினமும் ஒவ்வொரு மணித்துளியும் நிகழ்காலத்தைத் தங்களுடைய சொந்தமாக்கி, எதிர்காலத்தைத் தீர்மானித்து கடந்து வந்த காலத்தை, பாதையை சரித்திரமாக்கி, நன்னெறி தழைத்தோங்க,
ஆனந்த வாழ்வுதனை தம்முடையதாக்கி,
பகுத்தறிவின் அடையாளம் சுடர்மிகு சோதியாய் ஒளிவீசக் கண்டேன் அன்பே..

அன்பே, நீயே சர்வ வல்லமை படைத்த சக்தியாய் அவ்வுலகில் அள்ளித்தரும் அற்புதங்களையும், அழகிய காட்சிகளையும்,
ஆக்கங்களையும் சொல்ல எனக்கு வாய்த்த இக்கவித் திறனும் போதாது அன்பே..

அன்பே உன்னால் கோர்க்கப்பட்ட கைகள் பிரிவதில்லை மரணம் தாண்டிய பின்பும்...
உடலை மறந்த அந்த ஆன்ம நேசம் கண்டு வியந்தேன் இவ்வாறெல்லாம் வாழ்வதும் சாத்தியமா என்றே!..

ஆம். சாத்தியமே என்று அன்பே மனதில் நீ அள்ளி தரும் நம்பிக்கையின் மீது என் இருதயம் அசைக்கமுடியாத நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டதாலே எனது மனதிலுள்ள சஞ்சலங்கள் யாவும் மறைய, மன அமைதியில் லயித்திருக்கிறேன் அன்பே...

யான் இன்பத்தை இவ்வையகமும் பெறுக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Apr-17, 9:08 pm)
பார்வை : 688

மேலே