என் சுவாசக் காற்றே
நீயின்றி நான் வாழ முடியுமா?
நெடுங்காலம் பிரிவை நெஞ்சம் தாங்குமா?
என் சுவாசக்காற்று வராமல் இருப்பதேனோ?
என்னை வாட்டிட உனக்கு ஆசைத்தானோ?
மையிட்ட கண்ணழகை மூடி மறைப்பதேனோ?
மௌனத்தால் மனதை கொள்ளை அடிப்பதேனோ?
ஆசையை மனதில் அடக்குவதேனோ? -என்
ஆசைகள் அறிந்தும் உனக்கு நாணமேனோ?
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்