என் சுவாசக் காற்றே

நீயின்றி நான் வாழ முடியுமா?
நெடுங்காலம் பிரிவை நெஞ்சம் தாங்குமா?

என் சுவாசக்காற்று வராமல் இருப்பதேனோ?
என்னை வாட்டிட உனக்கு ஆசைத்தானோ?

மையிட்ட கண்ணழகை மூடி மறைப்பதேனோ?
மௌனத்தால் மனதை கொள்ளை அடிப்பதேனோ?

ஆசையை மனதில் அடக்குவதேனோ? -என்
ஆசைகள் அறிந்தும் உனக்கு நாணமேனோ?

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (22-Apr-17, 10:56 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : en suvasak kaatre
பார்வை : 463

மேலே