மகளே மங்கா புகழே வாழியவே
ஆற்றல் மிக்க அறிவுக்கடலே!
அன்னம் ஊட்டும் அன்பின் வடிவே!
ஓய்வை நாடாத உழைப்பின் ஊற்றே!
உயிரைத் தரும் உயிரே வாழியவே!
விவேகம் கொண்ட வீரமங்கையே!
வெல்லத் துடிக்கும் பெண்மையே!
மடமையை விலக்கும் ஒளியே!
மகளே மங்கா புகழே வாழியவே!
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்