காதல் கனவுகள்

தினம் இரவில் வரும் கனவில்
அழகி உன்னை நினைத்திடவே
இதயத்திலே முகம் வடித்து
விழிக்கும்வரை நினைத்திடுவேன்

காதல் கனவிலே தேவதைமுகம்
பார்க்கும்போதிலே பேரின்பம் தரும்
கனவுகளை பாடிடவே கவிதை வரும்

காலை வேளை விடிந்தாலும்
காலங்களும் கடந்தாலும்
கன்னி உன்னை எண்ணி
கவிதைகளை நான் வடிப்பேன்

காலம் முழுவதும் கனவுகள் வரும்
நாளும் எனக்கது இன்பங்கள் தரும்
கனவினிலே உன் நினைவுகளில் வாழ்ந்திருப்பேன்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (23-Apr-17, 10:01 am)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : kaadhal kanavugal
பார்வை : 824

மேலே