சோகம் நிறைந்த சோமாலியா
ருசியில்லை என்று நீங்கள்
ஒரு நிமிடத்தில்
ஒரு வேளை உணவை ஒதுக்கி விடுகிறீர்கள்...
ஆனால்,அந்த
ஒரு வேளை உணவு கிடைக்க
ஒரு மாத காலத்திற்கு மேலும் அவர்கள் காத்திருப்பார்கள்..
சோமாலியாவில் சோர்ந்து கிடக்கும் பிஞ்சுகளின் முகத்தை பாருங்கள்..
சோறு தண்ணி இல்லாமல் அவர்கள் படும் அவஸ்த்தையை பாருங்கள்..
உணவை வீணாக்காதீர்கள்...
இறைவனிடம் கையேந்துகையில்
இவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்
---ஷாகி---