அன்பே நிரந்தரத் தீர்வு

சுட்டெரிக்கும் சூரியனைப் போன்றே பிரகாசிக்கும் அன்பே,
குளிர்ந்த ஒளி கொண்ட சந்திரனைப் போன்றே அகங்தனைக் குளிர்வித்து நிறைந்த மனதின் முக்திக்கும் வழிகாட்டும் அன்பே,
உன்னை மந்திரமென்று சித்தமெல்லாம் நித்தமும் சிந்திக்க, எங்கும் பரவுகிறது உண்மையான அன்பின் ஒளிக்கீற்று..

இருதயங்கள் யாவும் உண்மையான அன்பே நீ வியாப்பிக்க, தவறான எண்ணங்களும், செயல்களும் அடியோடு ஒழிந்து எங்கும் பரவுகிறது ஆனந்த வாழ்வு...

அன்பே நீ சகலவிதமான போராட்டங்களுக்கும் முடிவு தர சக்தியுடையோய், பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வுகளாகி தீமைகளை வேரறுத்து நன்மைகளை நிலை நாட்டவே சக்தியுடையோய்,
உன்னில் என் மனம் சமர்ப்பணம் செய்வதிலே கோபமும், குரோதமும் நீங்கி, அகந்தையும், அழுக்காறும் அழிந்து நிம்மதி கொள்கிறதென்பதை மகிழ்ச்சியோடு அறிகிறேன் அன்பே..

அன்பே உன்னில் சரணடைய, சாதியோ, மதமோ, இனமோ, மொழியோ, நிறமோ, நாடோ என்றும் தடையாக அமைவதில்லை என்பதை அறிந்த நல்ல இருதயங்களில் எல்லாம் நிச்சயம் சர்வ வல்லமை படைத்த அன்பே உனது அரசாட்சியே நடக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை அன்பே..

தெளிந்த ஞானத்தை அளித்தரவல்லது உண்மையான அன்பு...
அவ்வன்பின் வழி பயணிப்பதே பகுத்தறிவின் அடையாளம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Apr-17, 3:25 pm)
பார்வை : 915

மேலே