காதலில் கோபம்
காதல்
இது என்னென்ன செய்யுமோ
இன்னும் என்னென்ன
மாயங்கள் செய்யுமோ
உன் மேல் மட்டும் ஏன்
என் இத்தனை கோபம்
வெடிக்கிறேன் பட்டாசாய்
உன் மேல் மட்டும் ஏன்
இத்தனை காதல்
மயங்குகிறேன் பட்டாம்பூச்சியாய்
தூரமாய் நீ
நிற்கும் போது
தொலைபேசியில்
தகதிமிதா ஆடும்
என் உதடுகள்
தோற்று தான் போகிறது
அருகில் வந்து என்னடா
என்றதும் மயங்கி போகிறேன்
இல்லடா என்று பொய்த்தாலும்
ஏமாந்து தான் போகின்றேன்
இல்லை உன் ஏந்தலில்
என்னை இழந்து போகிறேனா
அடக்கி வைத்த
என் ஆத்திரங்கள்
உன் புன்னகையை
தாக்குப்பிடிக்க முடியாமல்
ஆறாய் ஓடி மடிகிறது
உன்னை கண்டதும்
வெடித்துசிதற காத்திருந்த
என் கோபங்கள்
இப்போதும் சிதறித்தான் போயின
கோவிலில் உடைத்த தேங்காயாய்
காணாத திசையில்
உன் கண்களை
கண்ட பின்பு
இந்த காதலில்
மட்டுமே ஊடலுக்குப்பின்
ஏமாறுவதும் அழகு
ஏமாற்றுவதும் அழகு
காதல்
இது என்னென்ன செய்யுமோ
இன்னும் என்னென்ன
மாயங்கள் செய்யுமோ
உன் மேல் மட்டும் ஏன்
என் இத்தனை கோபம்
வெடிக்கிறேன் பட்டாசாய்
உன் மேல் மட்டும் ஏன்
இத்தனை காதல்
மயங்குகிறேன் பட்டாம்பூச்சியாய்
-யாழினி...