வாழ்வியல் உண்மை

பிறக்கும் குழந்தை
புவிக்கு வந்ததை அழுது சொல்லும்
அந்த அழுகையின் குரலில்
அன்னை வலியை மறந்து
அகம் குளிர்வது போல்

கால் கடுக்க நடந்து
குடத்தில் எடுத்து வரும் நீர்
குடும்ப தாகத்தைத் தீர்க்கும்போது
காலின் வேதனை மறைந்து
மனம் மகிழ்வு கொள்ளும்

விடிந்தால் ஒரு மறியல்
வழி நெடுக வாகனங்கள்
வாழ்வாதாரம் பறிபோகும்
வழக்கம்போல் வரும்
அதிகாரியின் வாக்குறுதியால்
அனைத்தும் மகிழ்ந்து கலையும்

அநுபவிக்காத வரை
அனைத்தும் புதிது தான்
அநுபவித்தால் அறியமுடியும்
மனம் வலுவடையும் வலியைத் தாங்க,
மார்க்கமும் புலப்படும்

தவறான பல முடிவுகளுக்கு பின்
தோன்றுவது அநுபவம்,
அந்த அநுபவத்திலிருந்து
கிடைக்கப் பெறுவது
சிறந்த முடிவெடுக்கும் திறன்
இது வாழ்வியல் உண்மை.

எழுதியவர் : கோ. கணபதி. (24-Apr-17, 7:37 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vaazviyal unmai
பார்வை : 102

மேலே