இறந்து போன மனம்
இறந்து போன மனம்
இங்கும் செல்லரித்துக் கொண்டு
இருக்கின்றதா? என்று பார்க்கவும்
இரக்கம் அற்றவர்கள்
இத்தனைக்கும் பிறகும் நான்
இன்னும் துடிக்க வேண்டுமா என்று
இறங்கிக் கேட்கும் மனமும்
இறக்கட்டுமே ?? இனி என்ன ?
இறவாப் பொழுதின் இணையா மனதின்
இருக்கும் நினைவும் இறக்கத் துடிக்கையில்
இன்னுமா வாழ்வு என்று இறக்கட்டுமே மனமும்
இறக்கட்டுமே ?? இனி என்ன ?
**** ஆக்கம் ரா. கிரிஜா