தினமணி கவிதைமணி தந்த தலைப்பு நீர் வற்றிய குளம் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !

நீர் வற்றிய குளம் கோடை விடுமுறையில்
நண்பர்களுடன் மட்டை விளையாடும் திடல் !

ஆடுகளும் மாடுகளும் புல் மேயும் இடமானது
அழகிய மீன்கள் இல்லாது ஒழிந்தன !

அசோகர் குளம் வெட்டினார் மரம் நட்டார் என்று
அன்று படித்த நினைவு இன்றும் உள்ளது !

ஆள்வோர் குளத்தில் கட்டிடம் கட்டுகின்றனர்
ஆலைகளுக்காக மரங்களை வெட்டுகின்றனர் !

நீர் வற்றிய குளங்கள் எல்லாம் இன்று
நீண்ட பெரிய கட்டிடங்கள் ஆகின !

மதுரையில் உய்ரநீதிமன்றம் இருக்குமிடம்
மாபெரும் உலகனேரி இருந்த இடம் !

இப்படி எத்தனையோ குளங்கள் ஏரிகள்
எத்தனையோ கட்டிடங்கள் ஆகிவிட்டன !

கோடையில் வற்றிய குளம் என்பது
கோடை முடிந்து மழையால் நிரம்பலாம் !

வறண்ட நேரம் பார்த்து பலரும்
வளைத்துப் போட்டு கட்டிவிடுகின்றனர் !

குளம் என்பது ஊருக்குப் பயன்பட்டது
குறுகிய சிந்தனையில் கட்டிடம் கட்டுகின்றனர் !

காணமால் போன குளங்களின் எண்ணிக்கை
கணக்கைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் !

புறம்போக்கு என்று சொல்லும் பல இடங்களில்
பழைய குளங்கள் இருந்த சுவடுகள் தெரியும் !

குளத்தில் தண்ணீர் இருந்தால்தான்
கொக்குகள் மீன் உண்ண வரும் !

மழைநீரை குளங்களில் சேமித்து வந்தால்
மண் செழிக்கும் வளம் கொழிக்கும் !

நீர் வற்றிய குளங்கள் சில மிச்சம் உள்ளன
நாம் தூர் வாரி மழை நீரை சேமிப்போம்

போனது போகட்டும் எஞ்சிய குளங்களை
போராடியாவது காப்போம் வாருங்கள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (25-Apr-17, 11:10 am)
பார்வை : 125

மேலே