இதயங்கள் இணைக புரிந்தபின்
நாடிய காதல் கைநழுவி விட்டதென்று
வாடிய நிலையில் நறுமண மலரொன்று
தேடிய நிம்மதிக்கு தனிமை வழியென்று
ஆடிய அணங்கு அமைதி நிலையிலின்று !
உருகிய உள்ளமுடன் கலங்கிய விழிகள்
கருகிய நெஞ்சமுடன் களையிழந்த கன்னி
பருகிய காதல் தேனமுதில் மயங்கியபடி
செருகிய பார்வையில் வருத்தம் வழியுதடி !
இணைந்த இதயங்கள் உடையும் நிலையில்
இடிந்த உள்ளங்கள் மடியும் காட்சியாகிறது !
இனியும் இந்நிலை நிகழாமல் இருந்திடவே
இதயங்கள் இணைக இருவரும் புரிந்தபின் !
பழனி குமார்