இதயங்கள் இணைக புரிந்தபின்

​நாடிய காதல் கைநழுவி விட்டதென்று ​
​வாடிய நிலையில் நறுமண மலரொன்று
தேடிய​ நிம்மதிக்கு தனிமை வழியென்று
​ஆடிய அணங்கு அமைதி நிலையிலின்று !

உருகிய​ உள்ளமுடன் கலங்கிய விழிகள்
கருகிய​ நெஞ்சமுடன் களையிழந்த கன்னி
பருகிய​ காதல் தேனமுதில் மயங்கியபடி
செருகிய பார்வையில் வருத்தம் வழியுதடி !

இணைந்த இதயங்கள் உடையும் நிலையில்
இடிந்த உள்ளங்கள் மடியும் காட்சியாகிறது !
இனியும் இந்நிலை நிகழாமல் இருந்திடவே
இதயங்கள் இணைக இருவரும் புரிந்தபின் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Apr-17, 2:16 pm)
பார்வை : 504

மேலே