அருந்திய கிண்ணங்கள் காலியானது

அருந்திய கிண்ணங்கள் காலியானது
விரும்பிய போதை தலைக்கேறியது
நிரம்பிய கிண்ணங்கள் ததும்புகிறது
ஏந்தியகரம் எங்கேயெனத் தேடுகிறது
உறங்குகிறான் பாவம் மீளாத்துயிலில் !

குடி கொல்லும் குடியைக் கொல்லும்
விடியலைத் தேடும் வாழ்க்கையில்
முடியாது தொடரும் சோகத்தின்இரவு
கடையை மூடு வாழ்க்கைக் கவிதையைப் பாடு
அரசே கடையை மூடு ஏழையின் வாழ்வைக் கொடு !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-17, 8:35 am)
பார்வை : 83

மேலே