உன்னோடு சிறு பொழுது

நீ உயரம் அதிகம் இல்லை ஆனால் காட்டிய அன்பிலோ உன் உயரம் யாரும் இல்லை.
என் காதோரம் உன் உதடுகள் சிணுங்கிய வார்த்தைகள் ஏராளம்.
என்னோடு நீ வந்த தனிமை பயணம் அந்த வான் நிலா மட்டுமே அறியும்.
என் கற்பனைக்கு கடிவாளம் இல்லாமல் செய்தவள் நீ.
உயிரோடு ஒன்றி உளமார கலந்தவள் நீ. .
யாரும் இல்லா வேளையிலும் கண்ணியம் கலந்த ஊடல் உன்னால் மட்டுமே சாத்தியம்.
உன் தொடுதலில் உணர்ந்தேன் குழந்தையின் மென்மை.. கண்ணில் கண்டேன் இதயம் பறிக்கும் மாய விசை.
உன் தோலில் சாய்ந்தாடா கைகள் கதை பேச உதடுகள் ஓய்வெடுக்க வேண்டும் அடி எனக்கு இன்னும் ஒரு சிறு பொழுது உன்னோடு..

எழுதியவர் : Amarnath (26-Apr-17, 1:13 pm)
சேர்த்தது : அமர்நாத்
பார்வை : 193

மேலே