இடைவெளி

இடையை வளைத்து
இடைவெளி விட்டு
நடந்து செல்லும் பெண்ணே
என்னைக் கண்டதும்
இரு விழிகள்
மூடுவது ஏனோ
உன் இரு விழிகள் திறந்தால்
என் இரு கரங்கள் பிடிக்க கூடும் என்பதாலா
இல்லை இதுவரை
நீ கொண்ட
ஒழுக்கம் களையக் கூடும் என்பதாலா
- பே.ருத்வின் பித்தன்

எழுதியவர் : ருத்வின் (26-Apr-17, 5:43 pm)
Tanglish : idaiveli
பார்வை : 176

மேலே