நீங்க தான் தேநீர நெறைய குடிக்கணும்

நீங்க தான் தம்ளர் நிறைய தேநீர் குடிக்கணும்.
😊😊😊😊😊😊
ஏண்டாச் செல்லம்?
😊😊😊😊😊😊
நீங்க தான் பெரிய பதவில இருந்து சம்பாதிச்சு கைநிறைய சம்பளம் வாங்கறீங்க. நான் வீட்டிலதானே இருக்கறேன். எனக்கு அரை தம்ளர் தேநீர் போதும்.
😊😊😊😊😊😊
கொஞ்சம் விளக்கமாச் சொல்லுடாச் செல்லம்.
😊😊😊😊😊😊
நான் இல்லத்தரசன் தானே. வீட்டைப் பெருக்கி, தொடச்சு, பாத்திரங்களக் கழுவி, சிற்றுண்டி தயாரிக்கும் போதே பிள்ளைங்க ரண்டு பேரையும் குளிக்க வச்சு , சீருடை போட்டுவிட்டு, காலை உணவு சாப்பட வச்சு பள்ளில அவுங்கள விட்டுட்டு வந்து உங்களுக்கு சிற்றுண்டியை எடுத்து மேசைல வச்சு உங்களச் சாப்பிட வச்சு உங்கள அலுவலகத்தில விட்டுட்டு வந்து நாஞ் சாப்பிட்டு காய் கறி வாங்கிட்டு வந்து சமைச்சு மதிய உணவு தயார் பண்ணி பிள்ளைங்களுக்கும் உங்களுக்கும் கொண்டு வந்து தரணும். அப்பறம் துணி துவைக்கிறது, துணிங்களத் தேச்சு வைக்கறது - இது மாதிரி வீட்டு வேலைங்களத தானே செய்யறேன். அதானல எனக்கு அரைத் தம்ளர் தேநீரே போதுமுங்க.
😊😊😊😊😊😊😊😊
பரவால்லடா முத்து. நீயும் நாளைல இருந்து ஒரு தம்ளர் தேநீர் குடிடா.
😊😊😊😊😊
ரொம்ப நன்றிங்க

எழுதியவர் : மலர் (26-Apr-17, 7:24 pm)
பார்வை : 187

மேலே