உன் வலிகள் மட்டும் என்னை தொடர்கிறது 555
என்னவளே...
என் விழிகள் தூசிகள் பட்டு
சிவக்கவில்லையடி...
உன் வார்த்தைகளை செவிகள்
கேட்டதால் விழிகள் சிவந்தது...
இதயத்தில் இருக்கும் பாரத்தை
விழிகள் கண்ணீரால் கரைக்கிறது...
யாரும் பார்க்குமுன்
கண்ணீர்த்துளிகள்...
மழையோடு கலந்துவிட
ஏங்குகிறேன்...
காதலில் சேராத கண்ணீர்
கடலிலாவது கலக்கட்டுமே...
என் வாழ்நாள் முழுக்க தனிமை
என்றாலும் சுகம்தான்...
என்னையே தொடர்கிறதே நீ
கொடுத்து சென்ற வலிகள் மட்டும்...
முடிந்தால் உன் நினைசுகளையும்
உன்னோடு அழைத்து சென்றுவிடு...
தனிமை உலகையாவது
ரசிக்கிறேன் நான் இனி.....