ஊசிமுனைநிழல்கள்

முற்றங்கள்தோறும் மூக்குத்தியின் ஒளிநகல்கள் பிதற்றும் பேதை மொழிகள் அறிவாயோ?
காலவெளியை கையில் நகர்த்த நான் கற்றோனில்லை...
சமிஞைகள் யாவும் சராசரியென
நம்பவில்லை...
நிகழ்வுகளோ சற்று நெஞ்சில் ஆழம் துயில்கின்றது.
காலை விடியலில் கனவுகள் தோற்பின் நிதர்சனம்...
கனவில் நீ! என்பதே ஐயம்.
புரியவில்லையா?
பிடிக்கவில்லையா?
புரியவில்லை என்பதே ஊசிமுனை..!
நிஜங்கள் உறங்க பொய்கள் போதுமடி..
நிழலுக்கோ நீ இல்லாத இருள் வேண்டும்.
என் நிழலாய் நீ!

எழுதியவர் : சுரேஷ் குமார் (27-Apr-17, 10:46 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 75

மேலே