ஒரு தொடக்கம்,
என்னில் உறங்கிக்கொண்டிருந்த எழுத்துக்களுக்கு
உயிர் கொடுத்து எழுப்பிய எழுத்து தளத்திற்கு என் முதல் நன்றி........,
இதுவரை கவிகளில் மட்டும் மையல் கொண்டிருந்த என் எழுத்துகளுக்கு
நடை சாயம் பூச ஆசை கொண்டேன் .
நான் ஒன்றும் சரளமாக எழுதுபவன் அல்ல.
ஆனால் என் எழுத்துகளுக்கு உயிர் உண்டு என உறுதியை நம்பிக்கை கொண்டவன்.
எழுதுபவன் எனக்கும் அதை வாசிப்பவர்கள் உங்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில்
நன்மை பயக்கும்.
பல வேளைகளில் என்னை நானே காரணங்களின்றி கடிந்திருக்கிறான்.
தனிமைகள் என்னை மொய்க்க நினைவுகள் தப்பி உயிர் வாழ்ந்த நாட்களை நினைவுகூர்கிறேன் .
என் இதயத்தை கீறிக்கிழிக்கும் முட்கள் அவை..........,
என் வலிகளை ஆற்றுப்படுத்த ஏதேனும் வழிகள் கிடைக்காத ஏன தவித்துருந்தேன் .
அப்பொழுது நான் கண்ட ஒரே ஒரு வழி........,
என் எழுத்துக்களோடு நடை போடுவது என்பதுக்கு தான்........,
என் எழுத்துக்களின் வழி நான் உயிர் வாழ்வான்.......,
அதற்க்கான
சிறியதொரு
துவக்கமே இது......,