பறந்தது புஷ்பக விமானம்
குப்பத்து அழகி இவள்
சிற்பமடா !
செதுக்க முடியாமல்
சிற்பியும் கை ஓய்ந்தானடா !
அழகிப் போட்டியில் இவள்
பங்கேற்ற போது...
பங்கேற்க வந்த
வானத்து மேனகையும் ஊர்வசியும்
புஷ்பக விமானத்தில் திரும்பிப் பறந்தே போயினரடா !
----கவின் சாரலன்