ஐம்பது ரூபாய் டிக்கெட்

ஐம்பது ரூபாய் டிக்கெட்
****************************

சென்னை, மதுரை போன்ற
நகரங்களில் ஒரு வழக்கம் உள்ளது...

அதாவது... ஐம்பது ரூபாய் கொடுதது
ஒரு டிக்கெட் வாங்குனா (ஒன் டே பாஸ்)
அன்னைக்கு முழுவதும் பஸ்சுல
டிக்கெட்டே வாங்காம நல்லா சுத்திக்கலாம்...

அப்படி ஒரு நகரத்துல ஒருத்தன்...
ஒருநாள் பொழுதை கழிக்க
அந்த டிக்கெட்ட எடுத்துக்கிட்டு
ஒரு பஸ்சுல ஏறிட்டான்...

அவனுக்கு
இந்தயிடத்துக்குத்தான் போகனும்னு
அவசியம் இல்ல... அன்னைக்கு முழுவதும்
உக்கார சீட் கிடைக்கிற பஸ்ல ஏறி
நினைக்கிற இடத்துல இறங்கி...
திரும்பவும் ஒரு பஸ்ல ஏறி...
சாயங்காலம் வரை பொழுத கழிக்கனும்
அவ்வளவு தான்....!!

அப்படி அவன் ஏறும் போது
காலியா இருந்த பேருந்து...
அடுத்த இரண்டு ஸ்டாப்புல
புல்லாகிடுச்சி....!!!

பஸ்ல பாதிபேர் உக்கார இடமில்லாம
நின்னுட்டு இருக்காங்க....
சிலபேர் படிக்கட்டுல தொங்கிக்கிட்டு வாராங்க...

அவங்க எல்லாம்....
இவனமாதிரி பயணம் பண்ணல...!!

தினமும்
இந்த இடத்துக்கு இத்தனை மணிக்கு போயே ஆகனும்...!
அதுக்கு இந்த பஸ்சுல ஏறுனாத்தான் போக முடியும்னு
பயணம் பண்றவங்க...!!
அது வேலைக்கோ அல்லது பள்ளிக்கோ...!!!

அந்த பஸ்ல ஒருத்தருடைய
சத்தம் மட்டும் சத்தமா கேட்டுக்கிட்டே இருக்கு...

"டிக்கெட் வாங்குறவங்க மறக்காம வாங்கிக்கோங்க...
எங்கமா போகனும்...
சில்லறை இருந்தா கொடுமான்னு..."

ஆனா இந்த சத்ததை பத்தி இவனுக்கு
கவலை இல்லை...
இவன் கிட்டதான் பாஸ் இருக்கே...

இவன் உக்காந்திருக்கிற சீட்டுக்கு
பக்கத்துல ஒருத்தன் கூட்டத்துல
கஷ்ட்டப்பட்டு நிக்கிறான்...

யாராவது அடுத்த ஸ்டாப்புல எந்திரிச்சா...
உடனே உக்காந்திடலாம்னு...!!!

இவனுக்கு அடுத்த ஸ்டாப்புல இறங்கனும்னு தோனுது...
ஆனா இவ்வளவு கூட்டத்துல கஷ்ட்டப்பட்டு
நெரிசல்ல போய் இறங்கவா...
பஸ் கொஞ்சம் காலியானவுடனே இறங்கிக்கலாம்னு
நினைக்கிறான்...

இதில் ஒரு விசயம் என்னன்னா...?

இலக்கு இல்லாம பயணம் பண்றவன்
ஒருநிமிஷம் கஷ்ட்டப்பட்டு இறங்கிட்டா...!

இலக்கோடு பயணம் பண்ணுறவன்
ஒரு பத்து பதினைஞ்சி நிமிசம்
நிம்மதியா உக்காந்திட்டு போவான்...!!

உண்மையில் இங்கு பாதிக்கு மேற்பட்டோர்
இலக்கு இல்லாமல் பயணம் செய்வதால் தான்...
இலக்கோடு பயணம் செய்பவர்களுக்கு,
அதில் இடம் கிடைப்பதில்லை....

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (28-Apr-17, 12:32 pm)
சேர்த்தது : க முரளி
பார்வை : 159

மேலே