தன்னைத்தானே காதலித்துப்பார்

தன்னைத்தானே நேசித்துப் பார்
சுமையும் சுகமாகும்
தன்னைத்தானே உற்சாகப்படுத்திப் பார்
நீ உறங்க வைப்பாய் பல உள்ளங்களை
உள்ளத்திற்கு ஊக்கம் அளித்துப்பார்
உன்னையே உற்றுநோக்கிப்பார்
உன்னையே ஆரோக்கியமாக அழகுபடுத்திப்பார்
இயற்கையே உன்னை நேசிக்கும்
தன்னையே காதலித்துப்பார்
கத்தி வெட்டுக்கூட காணலாய் தோன்றும்
தனக்கு தானே ஆறுதல் கூறிப்பார்
ஆக்கம் அதிகரிப்பதை அறிவாய்
ஆனந்தம் பெறுவாய்
தன்னைத்தானே நேசித்துப்பார்
சோகமொன்றும் வராது
சோர்வில்லாமல் செயல் புரிவாய்
புன்னகை பூப்பாய்
புவியில் வேண்டியதை அடைவாய்
தன்னைத்தானே காதலித்துப்பார்
சுமையும் சுகமாகும் ........

எழுதியவர் : முனைவர் கி.புஷ்பம் (28-Apr-17, 2:28 pm)
சேர்த்தது : முனைவர்கிபுஷ்பம்
பார்வை : 101

மேலே