குழந்தைச் செல்வங்கள் --படித்ததில் பிடித்த கவிதை

நடமாடும் தெய்வங்கள்
உடன் வாழும் தேவதைகள்
தேன்சுவை பலாவினும் இனிப்பான முத்தங்கள்

தித்திக்கும் மழலையோ
தெய்வீக ராகங்கள்
எத்திக்கும் எல்லோரும் ஏற்றி மகிழும் தீபங்கள்

வாழ்க்கைக்கு பொருளாக
வந்துதித்த சூரியர்கள்
ஏழ்மையும் செல்வமும்
எதிர்பார்க்கும் புதையல்கள்

சேட்டைகளால் நம் மனதை
வேட்டையாடும் வித்தகர்கள்
உள்ளம் கவரும் கள்வர்கள்

மொழியில்லா மொழி பேசும்
பிழையில்லா இலக்கியங்கள்
மலையளவு துயரெனினும்
மறைந்தோட செய்பவர்கள்

எழுதியவர் : (28-Apr-17, 5:55 pm)
பார்வை : 45

மேலே