சாலையோரப் பிள்ளையாருக்கு நேர்ந்த துயரம்

பொதுநிலத்தில் ஆலயம்கட்டி போதுமளவு இறைவழிபட்டது அன்றைய பெருசுகள்
ஓலையில் பாட்டெழுதி ஓயாது துதிபாடுவது இன்றைய பெருசுகள்...

எவர் கண்பட்டதோ தெரியவில்லை...!

தார்சாலை அகலப்படுத்த அவசரமாய் பரிந்துரை செய்தது பொதுப்பணித்துறை
தானியங்கி இயந்திரங்களால் தரைமட்டமாக்கப்பட்டது சாலைப் பிள்ளையார் அடைக்கப்பட்ட சிறை...

போராளிகளைக் காணவில்லை பொதுத்துறையை கண்டிக்க
பக்திமான்களைக் காணவில்லை படையலிட்ட மடமொன்று தடம்தொலைத்துப் போவதை மறித்திட...

சாலையோரப் பிள்ளையார் சங்கடத்தில் சாய்ந்திருக்க
மாலையிட்டு வணங்கவந்த மணக்கோல தம்பதிகளை மயங்கியநிலையிலும் மனதார வாழ்த்திடுவாரா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (28-Apr-17, 7:57 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 65

மேலே