நிலவும் கதிரும்

கதிர் மூன்று நிலவிரண்டு நாமறிந்தது
மூன்றுக்குள் அடக்கம் செங்கதிரோன்
இரண்டுக்குள் அடக்கம் தண்ணிலவு

காலத்தின் கோலம் இடறியதால்
ஒரு நிலவும் கதிரொன்றும் பூந்தோட்டம் மிளிர்கின்ற
வானவீதியில்
கட்டுண்டு காலத்தைக் கணக்கிட்டபடி

ஒரு கதிரோ மீனில்லா குளமொன்றின்
சேற்றினிலே நெளிந்தபடி இரைதேட
வந்த இரு மீனவரும் வலையின்றியே
சேற்றோடு கொழுத்த மீனைப் பிடித்துவிட்டார்!

இனி என்ன ஆகுமென்ற கேள்விக்கெல்லாம்
அந்த சிவலோக நாதனே விடை தருவான்!

எழுதியவர் : இமயம் (28-Apr-17, 8:26 pm)
பார்வை : 217

மேலே