இதயம் பேசுகிறேன்

ஆழ்மன மொழி யாருக்குப் புரியும்.
வெற்றிடமான மன வெளியில்.....
விறைத்து நிற்கும் உணர்வுகள்....
ஏற்க மறுக்கும் உண்மையின் இரைச்சல்கள்..
எங்கே ஓடத்தவிக்கின்றேன்..
தனிமையின் நிழல் தேடி....
அத்தனிமையில் நான் மட்டும்....போதும்.....
வலி கொடுக்கும் உன் நினைவுகளை மறந்து விட்டு......
இனி என் வாழ்வில் இரவுகள் மட்டும் போதும் நிலவுகள் தேவையில்லை...
கருமையாய் வரும் பகல்களை மட்டும் அனுமதிப்பேன்....
கடும் ரணமாற்றும் ஒளஷதங்கள் தேடினேன்....என் உயிர் வலி தீர்க்க ..
தேடித் தீர்ந்தது என் தேடல்....
புன்னகைக்கும் முகமூடி வேண்டும்...மாட்டிக்கொள்ள...
என் புன்னகை எனைச் சேரும் வரை...

எழுதியவர் : கவியாழினி (28-Apr-17, 11:15 pm)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : ithayam pesukiren
பார்வை : 124

மேலே