எனக்குள்ளே நீ யார்

நண்பர்கள் கூட்டத்தில்
நான் என்னை மறந்ததுண்டு ...

நண்பகல் வேளையில்
கண்கள் காட்சி துறந்ததுண்டு ....

மெல்லிசை மேவும் போது
உள் மௌனம் கலைந்ததுண்டு ....

சுயத்தை தொலைத்து -
சுகத்தை விதைத்த -
எனக்குள்ளே நீ யார் ??? ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (29-Apr-17, 1:49 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
Tanglish : enakulle nee yaar
பார்வை : 141

மேலே