அவர்களோடு அவளும்

என் வாழ்க்கை ஓட்டத்தில்
நான் கடத்தியவைகளை விட என்னை
கடந்து சென்றவர்கள் அதிகம்...

கண்ணீரை பரிசை தந்து
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போனோர்...

தவறொன்றும் செய்யாத என்னை
தவிக்க விட்டு
சென்றோர்..

இதயத்தை இரண்டாக பிளந்து வலி
கொடுத்து என் வழியில் இருந்து அகன்றோர்...

கள்ளமில்லாத அன்பை பொழிந்ததால்
என்னை
வெறுத்து ஒதுக்கியோர்...

உற்ற நண்பன் என சொல்லி ஒரு
குற்றம் காணாமல் வேறொரு துணை கண்டு
என்னை மௌனத்தால் அடித்தோர்....

அவர்களால் நான் காய்ந்து போனேன் ஆனால்
என் இதயத்தின் ஒரு பிரேதேசத்தில் ஈரம் இன்னும்
ஒட்டிக்கொண்டிருந்தது அவளுக்காக....

நான் உன்னை காதலிக்கவில்லை என்ற சொற்களை விட
என் காதலை நீ புரிந்துகொள்ளக் கூட இல்லை என்பதுதான்
இந்த கர்ணனை சாய்த்து விட்ட பிரம்மாஸ்திரம்...

கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு
கண்களும் காய்ந்தது,கவலை என்னை
நினைத்து கவலைப்படுகிறது...

கொட்டிய அன்புகள் குப்பைத்தொட்டியில்
இருக்கக் கண்டு எனை கொன்றுபுதைக்கும்
வரமொன்று கேட்டேன் இயற்கையிடம்...

இறைக்கு கூட என்மீது
இரக்கம் இல்லை என்பதை
இப்பொது புரிந்துகொண்டேன்..

அவர்களை போலவே அவளும்
என்னை காயப்படுத்தி போகிறாள்,போகட்டும்
தனிமையின் கரம் பிடிப்பேன்...நான்...!


சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (29-Apr-17, 7:49 am)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
Tanglish : avargalodu avalum
பார்வை : 59

மேலே