ஒரு மழைப் பொழுதில்

தனிமையில் நடக்கிறோம் நாம்....
என்விரல் கோர்க்கிறது உன்விரல்....
உரசிக்கொள்(ல்)கிறது நம் தோள்கள்.....
வாழ்த்துக்கள் கூறி தண்ணீர்பூக்களை மழையாய் தூவுகிறது வானம்....
நனைந்த மயிலாய் நடுங்க்கும் தேகத்துடன் நீ.....உன் நெற்றியில் வடியும் நீர்துளியை உதட்டால் சிறைஎடுக்கும் எண்ணத்துடன் நான்.....

இப்பிடியே உறைந்து இருந்து விடக்கூடாதா இந்த யுகம்.......

-பா.அழகுதுரை

எழுதியவர் : பா.அழகு துரை (29-Apr-17, 8:00 am)
சேர்த்தது : பாஅழகுதுரை
பார்வை : 64

மேலே