தனிமையில் துடிக்கும் ஒரு இதயம் 555

என்னவளே...

நீயும் நானும் பலமுறை
சந்தித்தோம்...

சிலமுறை
சண்டைபோட்டோம்...

இன்று சில நிமிடம்
மட்டும் என்னோடு...

நீ இருந்தாய் என்னவளாக இல்லை
நீவேறு நான்வேறு என்று...

உனக்கு பிடிக்கவில்லை
என்னை மறந்துவிடு...

நான் உன்னை மறக்க
வேன்றுமென்று சொல்லாதே...

எண்ணில் நீயும் உன்னில்
நானும் என்று...

நான் வாழ்ந்துவிடுவேன்
மண்ணில் நான் வாழும்வரை...

செய்யாத தவறுக்கு தண்டனை
நான் அனுபவிக்கிறேன்...

நிமிடம் மட்டுமே உனக்கு
தேவைப்பட்டது என்னோடு...

எனக்கு வேண்டும் இன்னும்
சில ஜென்மங்கள்...

உன் ஆசையை நான் நிறைவேற்ற
முயற்சி செய்கிறேன்...

நான் உன்னை மறக்க...

வலியில் துடிக்கும்
என் இதயத்திற்காக...

உன் மனதை நீ மாற்றி
கொள்ளாதே...

என் இதயம் உன்னை
ஏற்காது இனியும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Apr-17, 8:28 pm)
பார்வை : 1171

மேலே