வானக்கடல்-கங்கைமணி
வானம் என்னும் நீலக்கடலில்
மலர்ந்த அல்லி மலர்தான் வெள்ளி.
வானவில் பாலம்
வளைந்து கிடக்க
நிலவுப்படகதை-
நீந்திக் கடக்க,
பார்த்து இரசித்த
மேகப் பறவைகள்
பறந்து செல்கிறதென்கோ-
விரைந்து !
வற்றா நிலையில்
வானக்கடலே.
வள்ளுவக் குறளாய்
வாழும் பொருளே !
சூரியஉதயம் கலங்கரைவிளக்கம்,உன்
சுந்தர எழிலினை அதுதினம் விளக்கும்.
பாரினில் கடல்,தினம்
பார்த்துனை வியக்கும்
பார்ப்பவர் நெஞ்சினில்
பரவசம் பிறக்கும்.
ஓசோன் படலம்
அலையா அலையோ
அதுவும் கிழிந்தால்
அதுவென்ன விலையோ.?!
விரிந்த கடலின் வியப்போ ரழகு
விளைந்த மின்னற்கொடி யோரழகு
கடைந்த அமுதாய் பனி யோரழகு
கவிழ்ந்து கிடைக்கும் கடலே அழகு !.
-கங்கைமணி