அந்த அறுபது நாட்கள்
அந்த அறுபது நாட்கள் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்
என் கணவருக்கு
என் மீது
எல்லையில்லா
கொள்ளை ஆசை !
நான்
தனிமையில் இருந்தால்
என்னவர்
கண்களில் காதல்
செயலிலோ துடிப்பு !
நான்
அருகே இருந்தால்
அள்ளி அணைப்பார்
தள்ளிப் போனாலும்
எட்டிப் பிடித்து
என் இதழ் பதிப்பார் !
நான்
தேவையோ இல்லையோ
என் ஸ்பரிசம்
எப்போதுமே
என்னவருக்குத் தேவை !
நான்
கடைவீதி சென்றால்
கைநீட்டி
கேட்பதெல்லாம்
புன்னகையுடன்
வாங்கித் தருவார் !
வெயில் அடித்தாலும்
மழை அடித்தாலும்
எனக்காக
குடை பிடிப்பார் !
எனக்கு மட்டும்
ஒரு இன்பமான
முடிந்துபோன
இனிமையான
அறுபதுநாள் பக்கங்கள் !
அப்போது
மோகம் முப்பதுநாள்
கணவர்
இப்போதோ
ஆசை அறுபது நாள்
கடந்த கணவர் !