நேற்று உனைத்தான்நான் பார்த்தேன் நிலவினில்

நேற்று உனைநான் கவின்வான் நிலவில் பார்த்தேன்
காற்று வெளியில் கவித்தென்ற லாய்இன்று வந்தாய்
ஆற்று வெளியில் அலைக்குளி ராய்இளம் தென்னங்
கீற்றிடை காலையொளி யாய்புன் னகைமெல்லப் பூக்கிறாய் !



நேற்று உனைத்தான்நான் பார்த்தேன் நிலவினில்
காற்று வெளியில் கவித்தென்ற லாய்இன்று
ஆற்று வெளியின் அலைக்குளிர் தென்னைமென்
கீற்றிடை காலையொளி யாய் !

----வரிகள் ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-May-17, 9:21 am)
பார்வை : 75

மேலே