உண்மை

உண்மை
சில கணங்கள் ஊமையாய்
மெளனிக்கும்....
துயில்வதில்லை...
விருட்சமாய் உருவெடுக்க
விதைகள் செய்யும்
சிலகால சாதகமே. . .

புதைக்கப்பட்ட உண்மைகள்
எழுதிடும் சரித்திரங்கள்
காலக் கரையான்களால்
மட்கப்படாத நெகிழிகள். . .

உண்மையின் பிளம்புகள்
ஆழிமையத்தே வெடித்து
ஆகாயத்தையே தின்னப்பார்க்கும்
எரிமலையின் செந்நிற நாக்குகள். . .

உண்மையை மறைக்க
முலாம் பூசிடும் பொய்கள்
சிலநேரம் உணர்விழக்க
முயன்றிடும் மயக்க மருந்தே. . .

உண்மையெனும் விருட்சத்தின்
கனிகள் கார்பைடு கல்கொண்டு
போலியாய் கனிவதில்லை. . .

உண்மையை வேலியாக்கி
கொளுத்து வளரும் ;பொய்ப்பயிர்கள். .
கொள்ளி ஏந்தும் தலைபோல
மாற்றான் தேவையில்லை. . .

உண்மை சிலநேரம்
வேண்டா விருந்தாளியாய்
ஓர்மூலை வீற்றிருக்கும்
பின் தவிர்த்தவனே
தனைவந்து வலிய
அழைக்க வைக்கும். . .

உண்மையை மறைத்தானும்
மறந்தானும்
உண்மையில் உறங்குவதில்லை. .
அலைபொங்கும் ஆழிக்கு
உலைபோட யார் இங்கே. . .
சு,உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (2-May-17, 7:24 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : unmai
பார்வை : 350

மேலே