கட்டியணைத்து
கட்டியணைத்து
கன்னங்களை
நனையவைப்பான்
என் செல்லப்பிள்ளை
எனும் எண்ணங்கள்
எல்லாம்
எனக்கின்றிப்
போனது......தனிமனித
தவிப்பில்
தொலைந்த
இனிமைகள்
என்னிடம்
ஏராளம்......!!
ஆண்டுகள்
மூன்று
கடந்தும்
அந்தரித்து
நின்றேன்.....ஆதரித்து
ஆறுதல்
சொல்ல
அன்பும் இல்லை
அன்பானவளும்
அருகில்
இல்லை......!!
வறுமையில்
பழகிப்போன
பாதி
வயிறுபோல......
இந்த
தனிமையில்
பழகிப்போனது
புன்னகைப்
பொய்கள்.....நலம்
நான் என்று
சொல்லிட......!!